நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய்
தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி,
பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்,
மருதிடைபோய் மண்ணளந்த மால்.
தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி,
பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்,
மருதிடைபோய் மண்ணளந்த மால்.
இப்பாடலுக்கு சரியாக விளக்கம் அறிய இயலவில்லை/...முழுதும் அறிந்து இடுவதற்கு அரங்கன் அருள் செய்யவேண்டும்
் தொடர்வது இந்தப்பாசுரம்
மாலுங் கருங்கடலே என்நோற்றாய், வையகமுண்
டாலின் இலைத்துயின்ற ஆழியான், - கோலக்
கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றும்
திருமேனி நீதீண்டப் பெற்று.
வையகம் |
-
| இவ்வுலகத்தை யெல்லாம் |
உண்டு |
-
| (பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றினுள்ளே வைத்து |
ஆலின் இலை |
-
| ஆலந்தளிரிலே |
துயின்ற |
-
| சயனித்துக் கொண்டவனும் |
ஆழியான் |
-
| திருவாழியை யுடையவனும் |
கோலம் கரு மேனி |
-
| அழகிய கறுத்த திருமேனியையுடையவனும் |
செம் கண் |
-
| செந்தாமரைக் கண்ணனுமான |
மால் |
-
| எம்பெருமான் |
கண்படையுள் |
-
| உறங்குகையில் |
என்றும் |
-
| எப்போதும் |
திருமேனி |
-
| அவனுடைய திருமேனியை |
தீண்ட பெற்று |
-
| ஸ்பர்சிக்கப்பெற்று |
மாலும் |
-
| (அந்த ஸ்பர்ச ஸுகத்தினால்) மயங்கிக்கிடக்கிற |
கரு கடலே |
-
| கரிய ஸமுத்ரமே! |
நீ என் நோற்றாய் |
-
| (இந்தப் பாக்கியம் உனக்குக் கிடைக்குமாறு) நீ என்ன நோன்பு நோற்றாயோ? |
நீலக்கடலும் மால் பள்ளி கொள்வதால் கருங்கடல் ஆனதுபோலும்.. கம்பராமாயணத்திலும் ஒரு பாடலில் கருங்கடலில் பள்ளிகொண்டு என்ற சொல் வரும் இன்னமும் சரியாக அதனி நினைவுபடுத்தி சொல்லவேண்டும்.
கடலை நோக்கி அது செய்த பாக்கியம் என்ன என்று கேட்கிறார் ஆழ்வார் பெருமான்.. அழகிய பாடல் இது.